மும்பை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்

18 ஆவது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகின்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணியின் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது.

போட்டி தொடங்கும் சமயத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மழை பெய்ததன் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 7.30 மணியளவில் தொடங்க வேண்டிய போட்டி சுமார் 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 203 ஓட்டங்களை பெற்று 06 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணிக்கு 204 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 19 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles