Monday, February 2, 2026
HomeMain NewsAmericaநியூயார்க் விமான நிலையத்தில் புறப்படும் தருவாயில் இரத்து செய்யப்பட்ட விமானங்கள்

நியூயார்க் விமான நிலையத்தில் புறப்படும் தருவாயில் இரத்து செய்யப்பட்ட விமானங்கள்

நியூயார்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் குழப்பத்தில் இருந்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஓடுபாதை நடவடிக்கைகளுக்குத் தேவையான ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக மேற்படி நடவடிக்க எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பணியாளர் பற்றாக்குறை காரணமாக வெளிச்செல்லும் போக்குவரத்தை நிறுத்துவதாக மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு கட்டளை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டாட்சி நிதியில் வெட்டுக்கள் செய்யப்பட்டதிலிருந்து நிலைமை மோசமடைந்துள்ளது, இதன் விளைவாக விமான நிலையத்தின் ஐந்தில் ஒருவர் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் பல மாதங்களாக, விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்தில் பெரும்பகுதி பிலடெல்பியாவிலிருந்து கட்டுப்படுத்தப்படுகிறது..

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குள் ஏற்படும் முற்போக்கான தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக FAA விமானங்களை மீண்டும் மீண்டும் தரையிறக்க வேண்டியிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular