நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைன் மீது ஒரே இரவில் “மழை பொழிந்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.

“கார்கிவ் ஒரு பயங்கரமான இரவைக் கொண்டிருந்தது” என்று ஆண்ட்ரி சிபிஹா சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் எழுதியுள்ளார்த. டொனெட்ஸ்க், டினிப்ரோ, டெர்னோபில் மற்றும் ஒடேசா பகுதிகள் உட்பட உக்ரைன் முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாக அவர் கூறுகிறார்.

“மக்கள் காயமடைந்து கொல்லப்பட்டனர், மேலும் எரிசக்தி உள்கட்டமைப்பும் சேதமடைந்தது” என்று அவர் மேலும் கூறுகிறார்.

“ரஷ்யாவின் கொலை மற்றும் அழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க” மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவளிக்க வேண்டும் என்றும் சிபிஹா வலியுறுத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here