கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களிலும் முக அங்கீகார கமராக்களை நிறுவ பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தற்போது 8 கவுண்டர்களில் மட்டுமே பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ், பொலிஸாரின் தலையீட்டின் மூலம் 30 குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்பட உள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வெளிநாட்டிலிருந்து வரும்போதும் அவர்களை அடையாளம் காண முடியும்.

இந்த கேமரா அமைப்பிலிருந்து வரும் காட்சிகள் குற்றப் புலனாய்வுத் துறையால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here