இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஒக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து வருகிற 10-ந்திகதி விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ளார்.

இதுகுறித்து இந்திய விண்வெளி வீரர் குழுத் தலைவர் சுபன்ஷூ சுக்லா கூறும்போது, ‘ஒக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்வதில் உற்சாகமாக இருக்கிறேன்.

விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் பயணத்தின் வாசலில் நிற்கிறேன். பல்வேறு அமைப்புகள் முதல் கண்டங்கள் மற்றும் கலாசாரங்கள் முழுவதும் மேம்பட்ட தளங்கள் வரை, இந்தப் பயிற்சி தீவிரமானது மற்றும் ஆழ்ந்த பலனளிப்பதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

விண்வெளியில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பின்னால் மாதங்கள், ஆண்டுகள் பெற்ற பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும். இந்த பயணத்தில், வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளையும் நான் என்னுடன் எடுத்துச்செல்கிறேன். என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here