டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், வரிக்குறைப்பு மசோதாவுக்கு வாக்களிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மஸ்க் என்ன விளைவுகளைச் சந்திப்பார் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.

என்.பி.சி நியூஸ் பேட்டியில் டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டார்.

டிரம்ப்பின் ” பிக் பியூட்டிபுல் பில்” என்ற வரிக்குறைப்பு மசோதா குறித்த மஸ்கின் கடுமையான விமர்சனமே இந்த மோதலுக்குக் காரணம்.

கடந்த ஆண்டு குடியரசுக் கட்சியின் பெரிய நிதி ஆதரவாளர்களில் ஒருவரான மஸ்க் விளங்கினார்.

இந்நிலையில் இப்போது மசோதாவை எதிர்த்த சில சட்டமியற்றுபவர்கள், மசோதாவுக்கு வாக்களித்த குடியரசுக் கட்சியினருக்கு எதிராக நிதி திரட்டும்படி மஸ்க்கிடம் கோரியிருந்தனர்.

இந்த சூழலில்தான், “அவர் அப்படிச் செய்தால் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று டிரம்ப் என்.பி.சி நியூஸிடம் கூறினார்.

மேலும், மஸ்க் “மரியாதையற்றவர்” என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தங்கள் உறவு முடிந்துவிட்டது என்றும் அவர்கள் உறவை சரிசெய்ய எந்த விருப்பமும் இல்லை என்றும், அவருடன் பேச எந்த நோக்கமும் இல்லை என்றும் டிரம்ப் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here