மேற்கு யார்க்கில் உள்ள ஹெக்மன்ட்விக் நகரில் நிகழ்ந்த ஒரு துயர தீ விபத்து சம்பவத்தில் சிக்கி ஒன்பது வயது சிறுமியும் ஒரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.19 மணியளவில் ரஸ்ஸல் க்ளோஸ், ஹெக்மன்ட்விக் என்ற முகவரியில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மருத்துவ உதவி அளிக்கப்பட்டபோதிலும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுமிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒன்பது வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், 11 வயது சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பறியும் ஆய்வாளர் பால் கிரேட்டோரெக் இது குறித்து கூறுகையில்,

“தந்தையும் மகளும் தங்கள் உயிரை இழந்த இந்த பயங்கரமான சோகமான சம்பவத்தை விசாரிக்க தீயணைப்புத் துறையில் உள்ள சகாக்களுடன் தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here