மாலைத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.

“உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னம், புகழ்பெற்ற கலைஞர் மற்றும் விருது பெற்ற தொழில்முனைவோர்” என்று மாலைத்தீவு சுற்றுலாத்துறை கத்ரீனாவைப் பாராட்டியுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து கத்ரீனா கூறுகையில், “ஆடம்பரம் மற்றும் இயற்கை அழகின் உச்சம் மாலைத்தீவு – அங்கு நேர்த்தி அமைதியுடன் இணைகிறது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது.

முன்னதாக, பிரதமர் மோடி மாலைத்தீவு புறக்கணித்து லட்சத்தீவுக்கு செல்வதை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் படங்களை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here