அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 242 பேர் இருந்தனர், இதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ், ஒரு கனடியன் மற்றும் ஏழு போர்த்துகீசியர்கள் மற்றும் விமான ஊழியர்கள் மற்றும் இரண்டு விமானிகள் இருந்தனர்.

அகமதாபாத்தில் இருந்து வெளிவரும் காட்சிகள் “பேரழிவு” என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

“இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன,” என்று இங்கிலாந்து பிரதமர் குறிபிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் III, ஒரு அறிக்கையில், “அகமதாபாத்தில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளால் நானும் என் மனைவியும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். பல நாடுகளில் இந்த பயங்கரமான துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எங்கள் சிறப்பு பிரார்த்தனைகளும் ஆழ்ந்த அனுதாபங்களும் உள்ளன”.

“இந்த மிகவும் துயரமான மற்றும் அதிர்ச்சிகரமான நேரத்தில் அவசர சேவைகளின் வீர முயற்சிகளுக்கும், உதவி மற்றும் ஆதரவை வழங்கிய அனைவருக்கும் நான் ஒரு சிறப்பு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்,” என்று இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here