இஸ்ரேல் – ஈரான் பதற்றங்களை தொடர்ந்து வான்வெளியை மூடிய ஜோர்தான்

இஸ்ரேல் – ஈரான் பதற்றங்களை தொடர்ந்து ஜோர்டான் தனது வான்வெளியை மூடியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எந்தவொரு போரிலும் எந்தவொரு தரப்பினரும் தனது வான்வெளியையோ அல்லது பிரதேசத்தையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, தனது வான்வெளியை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஜோர்டான், இதுபோன்ற நடவடிக்கைகள் பிராந்திய பாதுகாப்பை அச்சுறுத்துவதாகக் கூறியுள்ளது. இதன் விளைவாக, தனது வான்வெளியை மீற அனுமதிக்காது என்றும், எந்தவொரு மோதலுக்கும் ஜோர்டான் போர்க்களமாக செயல்படாது என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

ஜோர்டானின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ள ஜோர்டான், தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் தனது குடிமக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும், பாதுகாப்புக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக்கொள்ளாது என்றும் கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles