நமது உடம்பில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதற்கு காலையில் சாப்பிட வேண்டிய உணவுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் மனிதர்களின் உணவுமுறை, வாழ்க்கை முறை இவைகளின் மாற்றத்தால் குணப்படுத்த முடியாத நோய்களும் நம்மில் அண்டிக் கொள்கின்றது.

அதில் ஒன்று தான் நீரிழிவு நோய் ஆகும். இவற்றினை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இவற்றினை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

அதிலும் காலையில் சாப்பிடும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் பழக்கம் இருந்தால், பலவித உடல் நலப் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

இஞ்சி எலுமிச்சை நீர்

காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டு டம்ளர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்து வெளியேறி செரிமானம் சிறப்பாக இருக்கும். இந்த வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை கலந்து குடித்தால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கவும்.

வெந்தய நீர்

இரவில் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் காலை வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதிலுள்ள கரையும் நார்ச்சத்து, இன்சுலின் உணர்திறனை தூண்டுகின்றது. ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கின்றது.

நெல்லிக்காய் ஜூஸ்

ஆயுர்வேதத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள நெல்லிக்காயில் ஆண்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்துகின்றது. காலையில் வெறும் வயிற்றில் 20 முதல் 30 மில்லி நெல்லிக்காய் ஜுஸ் பருகலாம்.

ஊற வைத்த பாதாம்

இதே போன்று ஊட்டச்சத்து நிறைந்த பாதாமும் உடலில் நீரிழிவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றது. தினமும் 4 அல்லது 5 பாதாம் சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம். இதிலுள்ள மெக்னீசியம் நரம்புகளை தளர்த்தி ரத்த ஓட்டத்தை சீராக வைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here