தன்னம்பிக்கையால் வாகை சூடும் ஒன்பதாம் எண் அன்பர்களே, இந்த வாரம் தேவையற்ற மனச் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்னை வராமல் தடுக்கலாம். திடீர் பணத் தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் அதீத கவனத்துடன் செயல்படுவது வெற்றியைத் தேடித்தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்ய எல்லா பிரச்னைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here