அர்ஜெண்டினாவில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அர்ஜெண்டினாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பியூனஸ் அயர்ஸ் நகர சதுக்கத்தில் ஒன்று கூடிய மக்கள், கிறிஸ்டினாவை விடுதலை செய்யக் கோரும் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.

இடதுசாரி எதிர்கட்சித் தலைவரான கிறிஸ்டினாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here