நினைவாற்றல் குறைபாடு ஏற்பட என்னென்ன காரணங்கள்?

நினைவாற்றல் குறைபாடு அல்லது ஞாபகக்குறைவு, மருத்துவ ரீதியாக “அம்னீசியா” என அழைக்கப்படுகிறது. இது ஏற்படச் செய்யும் முக்கிய காரணங்கள் பல உள்ளன.

முதலில், மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம் நினைவுத் திறனை பாதிக்கக்கூடும். அதேபோல், திடீரென ஏற்படும் மூளைக் காயங்கள் அல்லது விபத்துகள் மூளையின் செயல்பாடுகளை குன்றச் செய்யும். மூளையில் ஏற்படும் தொற்றுகள், நீரிழிவு, தீவிர மன அழுத்தம், மதுவுக்கு அடிமை ஆகிவிட்ட பழக்கம், மருந்துகளின் பக்கவிளைவுகள், தைராய்டு குறைபாடு, வளர்ச்சி மாற்ற நோய்கள் போன்றவை நினைவுத் திறனை மங்கச் செய்யக்கூடும்.

அதிலும், நீரிழிவாளர்களுக்கு அதிகமாக ரத்த சர்க்கரை இருப்பின், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு பாதிப்பை ஏற்படுத்தி ஞாபக மறதி உருவாகும். சிலருக்கு, இன்சுலின் எதிர்ப்பை காரணமாக, மூளையில் அமிலாய்டு புரதங்கள் அதிகரித்து நினைவாற்றல் குறையக்கூடும். பெரும்பாலானோர் சமீபத்திய நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

இதற்கான தீர்வாக, மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான மருந்துகளைப் பயன்படுத்தலாம். அதோடு, தினமும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள், குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன்கள், வால்நட் போன்றவை உணவில் சேர்க்க வேண்டும். நடப்பயிற்சி, நல்ல நித்திரை, மனஅழுத்தக் குறைப்பு, மது–புகையிலை விலக்கு ஆகியவை ஞாபக மறதியைத் தடுக்க உதவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles