இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் வெளியேறுவதற்கு வசதி செய்யத் தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

‘ நேற்று (19) மட்டும் நான்கு பேர் இஸ்ரேலை விட்டு வெளியேற வசதி செய்யப்பட்டதாகவும், இஸ்ரேலில் விடுமுறை நாட்களாகிய இன்று (20) மற்றும் நாளை (21) தூதரகம் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

“இலங்கைக்கு வந்திருப்பவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். ஜூன் 14 ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து, ஒருவரின் விசா காலாவதியாகிவிட்டால், சர்வதேச விமானங்கள் மீண்டும் தொடங்கும்போது விமான நிறுவனங்கள் அவர்களுக்கு அறிவிக்கும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விசா காலாவதியாகிவிட்டாலும், அவர்கள் நாட்டிற்குள் நுழைய டிக்கெட்டுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, அவர்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here