குரோய்டனில் உள்ள பர்லி வே அருகே சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் பெயர் விவரங்களை மெட் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வியாழக்கிழமை (ஜூன் 19) மாலை 5 மணிக்குப் பிறகு கோஸ்ட்கோவிற்கு அருகிலுள்ள இம்பீரியல் வேயில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்கள் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை மீட்டதுடன், முதலுதவி வழங்கிய போதும், அங்கேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் நேற்று காலை (செவ்வாய், ஜூன் 24) அந்தோணி மோரிசன், 41 என பெயரிடப்பட்டுள்ளார். அவரது நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
