மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையம் (PIBA), இஸ்ரேலில் உள்ள தங்கள் சொந்த வேலைவாய்ப்புகளுக்குத் திரும்பும் நம்பிக்கையுடன் மறு நுழைவு விசாவுடன் இலங்கைக்கு வந்தவர்களின் மறு நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை 2025.07.31 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, இஸ்ரேலுக்கான சர்வதேச விமானங்கள் தற்போது தொடங்கியுள்ளதால், மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வந்தவர்கள் மறு நுழைவு விசா காலாவதியான பிறகும் கூட 31.07.2025 வரை இஸ்ரேலில் வேலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here