பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டு தாக்குதல் : 13 வீரர்கள் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று (28.06) நடந்த தற்கொலைத் தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பொதுமக்கள் உட்பட 29 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் AFP இடம் தெரிவித்தனர்.

“ஒரு தற்கொலை குண்டுதாரி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை இராணுவத் தொடரணி மீது மோதியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர், 10 ராணுவ வீரர்கள் மற்றும் 19 பொதுமக்கள் காயமடைந்தனர்,” என்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“வெடிப்பில் இரண்டு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன, ஆறு குழந்தைகள் காயமடைந்தனர்” என்று மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை அதிகாரி AFP செய்தி சேவையிடம் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles