பிரான்சின் நிம்ஸின் வால்டெகோர் மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு தெருவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.

போதைப்பொருள் குற்றங்களுக்குப் பெயர் பெற்ற குறித்த பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் துப்பாக்கிபிரயோகம் நடந்ததாகவும், அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற நிலையில், கொலை முயற்சி தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here