லண்டனில் உள்ள ஒரு தொழில்துறை எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இரவு முழுவதும் 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் 25 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தென்கிழக்கு லண்டனில் உள்ள மேபோல் கிரசென்ட்டில் உள்ள ஒரு தொழில்துறை எஸ்டேட்டில் நேற்று இரவு 10.47 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

அவசர சேவைகளின்படி, தற்போது ஒரு கிடங்கு தீப்பிடித்து எரிந்து வருவதாகவும், ஏராளமான வாகனங்கள் தீயில் எரிக்கப்பட்டுள்ளன.

புகை காரணமாக உள்ளூர்வாசிகள் தங்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எவ்வாறாயினும் தீ இப்போது கட்டுக்குள் இருப்பதாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here