காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன – தேநீர் குடிப்பதா, நடைபயிற்சி செய்வதா, பழங்கள் சாப்பிடுவதா அல்லது காலை உணவு சாப்பிடுவதா என்று குழப்பம் இருக்கும். இருப்பினும், மிகவும் அடிப்படை மற்றும் நன்மை பயக்கும் செயல், பல் துலக்குவதற்கு முன்பே தண்ணீர் குடிப்பதுதான். “காலையில் எழுந்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு அற்புதங்களைச் செய்யும்” என்று மும்பையில் உள்ள கிளெனெகிள்ஸ் மருத்துவமனை பாரலில் உள் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் தெரிவித்தார்.

6-8 மணி நேர தூக்கத்திற்குப் பிறகு, உங்கள் உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. “காலையில் முதலில் தண்ணீர் கொடுப்பது உங்கள் உறுப்புகளை ‘விழித்தெழ’ உதவுகிறது, நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும், தினமும் சிறப்பாக செயல்பட மூளையைத் தூண்டுகிறது” என்று டாக்டர் அகர்வால் கூறினார். மேலும், இதன் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று மேம்பட்ட செரிமானம் என்று அவர் குறிப்பிட்டார்.

நிபுணரின் கூற்றுப்படி, தண்ணீர் உங்கள் வயிறு மற்றும் குடல்கள் சீராக செயல்பட உதவுகிறது. “இது மலச்சிக்கல் மற்றும் வாய்வு ஆகியவற்றைத் தடுக்கிறது. தங்கள் நாளை தண்ணீருடன் தொடங்கும் பலர் தங்கள் செரிமானம் மேம்படுவதையும், நாள் முழுவதும் இலகுவாக உணர்வதையும், அவர்களின் சருமத்திலும் குறிப்பிடத்தக்க முடிவுகளைக் காண்பதையும் காண்கிறார்கள். சருமம் புத்துணர்ச்சியுடனும், மிருதுவாகவும், நீரேற்றத்துடனும் இருக்கும். இது தெளிவான சருமத்தையும் ஆதரிக்கிறது. நீர் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது, இது முகப்பரு மற்றும் வறட்சியைக் குறைக்க உதவுகிறது, உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கிறது,” என்று டாக்டர் அகர்வால் விளக்கினார்.

காலை வேளையில் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆற்றல் மட்டங்களையும் அதிகரிக்கும். “உங்கள் உடல் நீரேற்றத்துடன் இருக்கும்போது, உங்கள் மூளை சிறப்பாக செயல்படுகிறது, நீங்கள் அதிக விழிப்புடன் உணர்கிறீர்கள், உங்கள் மனநிலை மேம்படுகிறது. காலையில் தண்ணீர் குடிப்பது கலோரி எரிப்பிற்கு உதவலாம் மற்றும் எடை மேலாண்மைக்கு ஆதரவளிக்கலாம், அதனுடன் சமச்சீர் உணவு மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்,” என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

எனவே, நீங்கள் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க ஒரு எளிய, இயற்கையான வழியை விரும்பினால், தினமும் காலையில் 1 லிட்டர் தண்ணீர் குடித்து புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருங்கள். “இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த அளவு தண்ணீர் குடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும், மேலும், தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி அதற்கேற்ப குடிக்க வேண்டும்” என்று டாக்டர் அகர்வால் எச்சரித்தார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுத் தகவல் களத்தில் இருந்தும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களிடமிருந்தும் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் உங்கள் சுகாதார மருத்துவரை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here