நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை – பக்கிஎல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, சீதுவை, ராகமை, ஹோமாகம, கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தொடர் கொலைகளுடன் சந்தேகநபருக்கு தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இராணுவ சிப்பாயான அவர், 8க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தநிலையில் சந்தேகநபரிடம் இருந்து 2 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளும், 4 போலி அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு தொகை ஐஸ் ரக போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வெவ்வேறு பெயர்களினாலான தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
