சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஜூலை 13இல்

‘வள்ளுவர் மறை

வைரமுத்து உரை’ நூலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெளியிட்ட அதே நாளில்

ஆளுநர் மாளிகையில்

ஒரு விழா

நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்

மருத்துவர்களுக்கு

வழங்கப்பட்ட

நினைவுப் பரிசில்

944ஆம் திருக்குறள் என்று

அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்

இல்லாத குறளை

யாரோ எழுதியிருக்கிறார்கள்

அப்படி ஒரு குறளே இல்லை;

எண்ணும் தவறு

யாரோ ஒரு

கற்பனைத் திருவள்ளுவர்

விற்பனைக் குறளை

எழுதியிருக்கிறார்

இது எங்ஙனம் நிகழ்ந்தது?

ராஜ்பவனில்

ஒரு திருவள்ளுவர்

தங்கியுள்ளார் போலும்

அந்தப்

போலித் திருவள்ளுவருக்கு

வேண்டுமானால்

காவியடித்துக்கொள்ளுங்கள்

எங்கள்

திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here