பங்களாதேஷில் பாடசாலை மற்றும் கல்லூரி அமைந்துள்ள கட்டடமொன்றின் விமானப்படையின் பயிற்சி விமானமொன்று மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் இன்று இந்த விமானம், மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான விமானம் பங்களாதேஷ் விமானப்படைக்கு சொந்தமான F-7 BGI ரகத்தைச் சேர்ந்தது என பங்களாதேஷ் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here