அமெரிக்காவில் ஒரு 68 வயது பெண்ணிடம் ஜோதிடம் பார்ப்பதாக கூறி 62,000 டொலர் மோசடி செய்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேமந்த் குமார் முனெப்பா என்ற இவர், பில்லி சூனியம் மற்றும் தீய சக்திகளை விரட்டுவதாக கூறி பணம் கேட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண் ஜோதிடம் பார்க்க முனெப்பாவை அணுகியபோது, அவர் “தீய சக்திகள் தாக்கம் செய்கின்றன” என்று பயமுறுத்தி, அவற்றை நீக்க சிறப்பு விழாக்கள் செய்யவேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதற்காக பெண்ணிடம் இருந்து பணம் கேட்டு, முறையாக சுரண்டியதாக குற்றச்சாட்டு உள்ளது.

அந்த பெண் வங்கியில் இருந்து பெரும் தொகையை ரொக்கமாக எடுத்துக்கொண்டபோது, சந்தேகத்துடன் நடந்துகொண்டதையடுத்து வங்கி ஊழியர்கள் உடனே காவல்துறையிடம் தகவல் வழங்கினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் முனெப்பா கைது செய்யப்பட்டார்.

முனெப்பாவுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டாலும், அவர் பொலிஸார் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்தச் சம்பவம், ஜோதிடத்தினை மூலமாக நம்பிக்கை தவறடைவதற்கான அபாயங்களை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here