அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக மருத்துவக் குழு, மருத்துவ வரலாற்றில் முக்கியமான ஒரு சாதனையை அடைந்துள்ளது.

ஒரு இறந்த இதயத்தை வெற்றிகரமாக உயிர்ப்பித்து, அதை மூன்று மாத குழந்தைக்கு மாற்றி பொருத்தி, அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை நெருக்கடியான சூழ்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இப்போது வரை, குழந்தையின் இதயச் செயல்பாடு மிகச் சீராகவே இருக்கிறது, மேலும் உறுப்பு நிராகரிப்பின் எந்த அறிகுறிகளும் தெரியவில்லை என மருத்துவர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சாதனை, ஆன்-டேபிள் ரீஅனிமேஷன் (on-table reanimation) எனப்படும் ஒரு நவீன மருத்துவ நுட்பத்தின் மூலம் சாத்தியமானது. இது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரத்தின் உதவியுடன், இறந்த நிலையில் இருந்த இதயத்தை மீண்டும் செயல்படுத்தி, சிறுமிக்குத் பொருத்தும் முறையாகும்.

இந்நிகழ்வு, சிகிச்சை முடிவுகள் மிகக் குறைவாக இருக்கும் நெருக்கமான நிலைகளிலும் மருத்துவ நுட்பங்கள் புதிய உயிர் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவை என்பதை நிரூபிக்கிறது. இது, எதிர்காலத்தில் இதய மாற்றுச் சிகிச்சைகளுக்கான புதிய பாதையைத் திறக்கக்கூடிய சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here