மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு பெண் ஒருவர் தனது மகனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, உந்துருளியில் பிரவேசித்த இருவரினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் உயிரிழந்ததுடன், 10 வயது சிறுவன் காயமடைந்தார்.
இந்தநிலையில் போதைப்பொருள் தகராறு காரணமாக  துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here