பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க தயாராகும் பிரான்ஸ் ஜனாதிபதி

செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மேடையில், பாலஸ்தீன அரசை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த முக்கிய முடிவு, காசாவில் தொடரும் உள்நாட்டு வன்முறைகளுக்கும், மக்களின் அவலங்களுக்கும் ஒரு தீர்வை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக மக்ரோன் கூறியுள்ளார்.

“உடனடி போர்நிறைவு மற்றும் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். அமைதி சாத்தியமே,” என அவர் வலியுறுத்தினார்.

பிரான்ஸ், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான தனது வரலாற்றுப் பங்கினை தொடரும் நோக்கில் இந்த அங்கீகார முடிவை எடுத்துள்ளதாக மக்ரோன் விளக்கியுள்ளார்.

பாலஸ்தீன் அதிகார சபை தலைவர் மக்மூத் அப்பாஸுக்கு எழுதிய கடிதத்தில், மக்ரோன், பிராந்தியத்தில் அமைதியை நோக்கி முன்னேறவதற்கான தனது உறுதியையும், பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வ உரிமைகளை மதிக்கவும் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-நோயல் பரோ, “இந்த அங்கீகாரம் செப்டம்பரில் உறுதியாக செயல்படுத்தப்படும். ஐ.நா. பொதுச் சபை மேடையில் அதனை ஜனாதிபதி மக்ரோன் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்,” என்றார்.

இந்த நடவடிக்கை, பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்துவரும் பாலஸ்தீன அங்கீகார அலையின் முக்கிய அங்கமாகவும், பிராந்தியத்தில் புதிய உள்நோக்கான அமைதி முயற்சிக்கு இக்காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles