ரஷ்யாவில் 48 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலியாகிய பயங்கரமான An-24 விமான விபத்து தொடர்பில் துணை விமானியாக பணியாற்றிய ஒருவர் போதை மருந்து பரிசோதனைக்கு உடன்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

An-24 விமானத்தின் கேப்டன் வியாசெஸ்லாவ் லோக்வினோவ் (61) உடன் 37 வயதான கிரில் பிளாக்சின் கொல்லப்பட்டார்.

“போதை மருந்துகள் அல்லது சைக்கோட்ரோபிக் பொருட்களின் பயன்பாடு தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மறுப்பது” தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஒரு விசாரணையை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு இன்று மாலை இர்குட்ஸ்கில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here