இஸ்ரேல் இராணுவத்தில் அரபு மொழி மற்றும் இஸ்லாமியக் கல்வி கட்டாயம்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் இனிமேல் அரபு மொழி மற்றும் இஸ்லாமியக் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல், உளவுத்துறையின் தோல்வி, மற்றும் ஈரானுடன் தொடர்புடைய விவரங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஆகியவை இந்த முடிவுக்கு காரணமாகியுள்ளன.

இது தொடர்பாக உளவுத்துறை அமான் தலைவர் மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் அறிவுறுத்தியுள்ளார். எதிரியின் மொழி மற்றும் மரபுகளை அறிந்திருப்பது பாதுகாப்பு ரீதியாக முக்கியம் எனவே, இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின்一பகுதியாக, ஹவுதி மற்றும் ஈராக்கிய அரபு பேச்சுவழக்குகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். அதிகாரிகள் மற்றும் வீரர்களில் 50% பேருக்கு அரபு மொழி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரபு பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ‘காட்’ (khat) எனும் போதைப் பொருளின் தாக்கத்தை அணுகும் விதமாக பயிற்சிகள் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் வழியாக, அரபு பேசும் மக்களின் குரல் மற்றும் பாணியை நன்கு புரிந்து கொள்ளும் திறன் அதிகாரிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கல்விக்காக தனி துறையும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles