காசாவில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள, உணவு விநியோக மையங்கள் அமைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து விஜயத்தில் உள்ள டிரம்ப், அங்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களை சந்தித்த போது, “காசாவில் உணவுக்காக மக்கள் அவதிப்படுவதை நாம் தவிர்க்க முடியாது. இஸ்ரேல் இதில் மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.

காசா மக்களுக்கு உணவு, சுகாதாரம் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளில், அமெரிக்கா மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த பிரச்சினை மனிதநேய அடிப்படையில் அணுகப்பட வேண்டும்,” எனவும், “அதற்கு தேவையான அமைப்புகள் விரைவில் அமையப்படும்,” என டிரம்ப் உறுதிபடுத்தினார்.

இந்தப் புதிய அறிவிப்பானது, காசா பகுதியில் நிலவும் உச்சக்கட்ட அவசரநிலைக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here