சீனாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தலைநகரை சுற்றியுள்ளது 130 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் தகவல் தொடர்பு இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்கின்றன.

பெய்ஜிங், ஹெபே மாகாணம் மற்றும் அண்டை நாடான தியான்ஜின் நகரத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இன்று (29.07) மாலை வரை அமுலில் உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குள் சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதையும், காயமடைந்த ஒருவரை மீட்புப் பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் ஏற்றிச் செல்வதையும் காணொளிகள் காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here