ஊர்காவற்றுறை, நரையாம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்த மாதா சொரூபம் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் கூடிய சிலர், வழிபாட்டுக்கென நிலை நிறுத்தப்பட்ட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மாதா சிலையை அடித்து நொறுக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறைப் பொலிசார் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
