இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5ஆவது போட்டி இன்று தொடங்கியது. முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி கேப்டனான சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி போட்டிக்கு முன்னதாக 8 இன்னிங்சில் 4 சதங்களுடன் (இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்) 722 ரன்கள் குவித்திருந்தார்.

இன்றைய போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை 15 ரன்கள் எடுத்துள்ளார். 11 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 732 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. இதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். தற்போது வரை 737 ரன்கள் அடித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here