சொந்த மண்ணில் அதிக ரன்கள் – சச்சினை முந்திய ஜோ ரூட்

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.

இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா அணி 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இப்போட்டியில் ஜோ ரூட் 29 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தங்களது சொந்த மண்ணில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்திற்கு ஜோ ரூட் ( 7220 ரன்கள்) முன்னேறினார்.

சொந்த மண்ணில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 7,578 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் சச்சின் 7,216 ரன்கள் அடித்துள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles