பாகிஸ்தானில் வயலில் புதைந்து கிடந்த வெடிகுண்டை விளையாட்டு பொருள் என நினைத்து, குழந்தைகள் எடுத்த போது அது வெடித்துச் சிதறியதில் 5 குழந்தைகள் பலியாகினர்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் 12 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் சில குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பாகிஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here