ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தவறியுள்ளார்.

இது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் ஷூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு தூதர்களை நியமித்திருந்தாலும், ஆஸ்திரேலியா இன்னும் வெற்றிடமாகவே உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் முறிவு ஆஸ்திரேலியாவிற்கு பாதகமானது என்றும் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அப்போது பேசிய இயக்குனர், பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஜனாதிபதி டிரம்புடன் நேரடி விவாதங்களை நடத்த முடியாதபோது இந்த பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவிலிருந்து ஒரு தூதர் இல்லாத இந்த நிலைமை ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு மற்றொரு சவாலாக இருக்கும் என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here