கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை பிரேமலதா தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, “எந்த ஒரு அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்த கூடாது. எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மட்டும் தேர்தல் நேரத்தில் அவரது படத்தை பயன்படுத்தலாம். ஆனால் திரைப்படங்களில் அவரது படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here