கையடக்க தொலைபேசியினால் மூளையின் செயல்பாடு பாதிக்கும் அபாயம்

கையடக்க தொலைபேசிகளில் சமூக ஊடகங்களை சில நிமிடங்கள் ஸ்க்ரோல் செய்வது மூளையின் செயல்பாடு மற்றும் செயல்திறனைக் குறைக்கும் என ஆய்வில், கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அலெக்ஸாண்ட்ரா கேலார்ட் மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

18 முதல் 25 வயதுடைய 27 பேர் இந்த ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

சமூக ஊடகங்களை விரைவாக ஸ்க்ரோல் செய்த 3 நிமிடங்களுக்குள் பங்கேற்பாளர்களின் ஆற்றல், மகிழ்ச்சி, கவனம் மற்றும் மன அழுத்த அளவுகள் மாறியதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

விளையாட்டுகள் போன்ற பிரச்சனை தீர்க்கும் செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது சமூக ஊடக ஸ்க்ரோலிங் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடிக்கடி சமூக ஊடகங்களை ஸ்க்ரோல் செய்வது காலப்போக்கில் உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமூக ஊடக பயன்பாட்டின் புதிய சகாப்தத்தில் இந்த ஆய்வு ஒரு சவாலாகக் கருதப்படுகிறது, மேலும் மேலும் ஆழமான ஆராய்ச்சி தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles