பாகிஸ்தானின் கராச்சியில் தாஜ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சேமித்து வைத்திருந்த இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்தால் தாக்கப்பட்ட கட்டடத்தின் கோபுரம் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் கட்டடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
