பிரிட்டனில் புகலிடக் கோரிக்கை முறை தொடர்பாக ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு புலம்பெயர்ந்தோர் வசிக்கும் ஹோட்டல்களுக்கு வெளியே போராட்டக்காரர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சீர்திருத்த UK தலைவர் நிகல் ஃபரேஜ் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரிட்டனில் உள்ளவர்களை சட்டவிரோதமாக “பெருமளவில் நாடுகடத்த” உறுதியளித்துள்ள நிலையில் இந்த மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.

Abolish Asylum System என் தலைப்பின் கீழ் பல சமூக ஆர்வலர்கள் அணிதிரளத் தயாராகி வருகின்றனர், பிரிஸ்டலில் இருந்து நியூகேஸில் வரை குறைந்தது 33 போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

வேல்ஸில் உள்ள எக்ஸிடர், டாம்வொர்த், கன்னாக், நியூனேட்டன், லிவர்பூல், வேக்ஃபீல்ட், ஹார்லி, கேனரி வார்ஃப், அபெர்டீன், பெர்த் மற்றும் மோல்ட் ஆகிய இடங்களிலும் கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here