Monday, February 2, 2026
HomeMain NewsMiddle Eastகாசா மருத்துவமனை தாக்குதலில் 20 பேர் பலி

காசா மருத்துவமனை தாக்குதலில் 20 பேர் பலி

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திர்கையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

நான்காவது மாடியின் மீது இரண்டு முறை வான்குதாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாக தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை பலத்த சேதம் ஏற்பட்டது.

மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சம்பவத்தை படம்பிடித்து கொண்டிருந்த பத்திர்கையாளர்கள் பலியாகினர்.

அசோசியேட்டட் பிரஸ், ராய்ட்டர்ஸ், அல் ஜஸீரா உள்ளிட்ட பத்திரிகைகளை சேர்நத 5 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் சூழலில் இது தவுறுத்தலாக நடந்த ஒரு “துயரமான விபத்து” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து உள் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை காயப்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்த கேள்விக்கு வெள்ளை மாளிகையில் ஊடகத்தினரிடம் பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இது எப்போது நடந்தது? எனக்கு அது தெரியாதே!. அதுகுறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை. அதை பார்க்க நான் விரும்பவில்லை. அதேநேரம் இந்த மொத்த கேட்ட கனவையும் நிறுத்த வேண்டும்” என்று பதில் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular