2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான Z புள்ளிகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 42,172 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த வருடம் 90,670 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்திருந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கலைப்பிரிவுக்கு 11,717 பேர் தகுதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here