வியட்நாமில் வெப்பமண்டல புயலுக்குப் பிறகு குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடகிழக்கு வியட்நாமின் சில பகுதிகளில் இரவு முழுவதும் கிட்டத்தட்ட 20 சென்டிமீட்டர் (8 அங்குலம்) மழை பெய்தது, மேலும் சில ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் உள்ளன.

இதேவேளை தாய்லாந்தில், வடக்கு நகரமான சியாங் மாயின் ஒரு பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் இறந்தார் மற்றும் மற்றொருவர் காணாமல்போயிருப்பதாக கூறப்படுகிறது.

தாய்லாந்தின் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறை, வடக்கு மாகாணங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் வானிலை ஆய்வுத் துறை புதன்கிழமை வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரித்தது. நீர்வழிகளுக்கு அருகிலுள்ள அடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here