Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryஅதிக வரி விதித்த அமெரிக்கா... 2 தசாப்தங்களை கடந்து எதிரொலிக்கும் வாஜ்பாயின் வார்த்தைகள்

அதிக வரி விதித்த அமெரிக்கா… 2 தசாப்தங்களை கடந்து எதிரொலிக்கும் வாஜ்பாயின் வார்த்தைகள்

பொருளாதாரத் தடைகள் முதல் பரஸ்பர வரிகள் வரை, இந்தியாவிற்கு அளிக்கப்படும் உதவிகளை தடுப்பது, சர்வதேச கடன்களைத் தடுப்பது மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களைத் தடை செய்தல் மூலம் அமெரிக்கா பலமுறை இந்தியாவை அழுத்த முயற்சித்துள்ளது.

இருப்பினும், இந்தியாவின் திறமையான ராஜதந்திரம் மற்றும் உள்நாட்டு வளர்ச்சி மூலம் இந்த தண்டனை நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்தது மட்டுமல்லாமல், வலுவான இருதரப்பு உறவுகளையும் ஏற்படுத்தியது.

1998-ம் ஆண்டு பொக்ரான்-II அணுசக்தி சோதனைகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அளித்த பேட்டியில்,

ஆம், எங்கள் நடவடிக்கைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது. இந்தியாவிடம் மகத்தான வளங்களும் உள் வலிமையும் உள்ளது.

1998-ம் ஆண்டு இந்தியா அமெரிக்க தடைகளை எதிர்கொண்டது. ஆனால் தேசிய பாதுகாப்பிற்காக அணு ஆயுத சோதனைக்கு உறுதியளித்தது.

புத்தர் மீண்டும் சிரித்தார் என்ற செய்திக்குப் பிறகு, மே மாதத்தில் தடைகள் வந்தன.

இந்தியா அமெரிக்க தடைகளில் இருந்து தப்பித்தது மட்டுமல்லாமல், பல வருட பொருளாதார வளர்ச்சியை காண மீண்டும் எழுச்சி பெற்றது.

தடைகள் நம்மை பாதிக்காது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனை நடவடிக்கைகளால் இந்தியா அடிபணியாது.

இந்த வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் இந்தியா தனது கடந்த கால மகிமையையும் எதிர்கால கண்ணோட்டத்தையும் வலுவாக மாற்றி உள்ளது என்று வாஜ்பாய் கூறினார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மே 11 முதல் 13 வரை, ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா சோதனைகளை நடத்தியது.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகள் நேற்று அமலுக்கு வந்த நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வாஜ்பாயின் வார்த்தைகள் மீண்டும் எதிரொலிக்கின்றன.

taxation, trump ,India ,Vajpayee

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular