பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (28) பிற்பகல், பாணந்துறை, மோதரவில பகுதியில் 18 மற்றும் 21 வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டு, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த 21 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாணந்துறையைச் சேர்ந்த லலித் குமார கோடகொட கொலை செய்யப்பட்டார்.

சந்தேக நபர்களிடமிருந்து போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள், போலி கடவுச்சீட்டு, காப்பீட்டுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் ஒரு ஜோடி போலி இலக்கத் தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பண்டாரகம பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here