Monday, February 2, 2026
HomeMain NewsIndiaரூ.1 லட்சம் கோடிக்கு நீர்முழ்கி கப்பல் ஒப்பந்தங்கள் : இந்தியாவின் திட்டம்..!

ரூ.1 லட்சம் கோடிக்கு நீர்முழ்கி கப்பல் ஒப்பந்தங்கள் : இந்தியாவின் திட்டம்..!

ரூ.1 லட்சம் கோடிக்கு நீர்முழ்கி கப்பல்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்பி திறனை அதிகரிக்கும் வகையில், ரூ. 1 லட்சம் கோடிக்கு மேற்பட்ட 2 நீர்முழ்கி கப்பல் ஒப்பந்தங்களை 2026 நடுப்பகுதிக்குள் இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவின் கடற்படை தாக்கம் அதிகரிக்கின்ற சூழலில் இந்த முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதல் திட்டம்

*மூன்று Scorpene-class நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் திட்டம்
*இந்தியாவின் Mazagon Dock Limited நிறுவனம் மற்றும் பிரான்சின் Naval Group நிறுவனம் இணைந்து உருவாக்கவுள்ளனர்.
*ரூ.36,000 கோடி மதிப்புள்ள இந்த திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
*ஆனால் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக விவரங்களை இறுதி செய்வதில் தைமாதம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் திட்டம்

*ஆறு டீசல்-மின்சார ஸ்டெல்த் நீர்முழ்கி கப்பல்களை வாங்கும் திட்டம்
*இதன் மதிப்பு சுமார் ரூ.65,000 கோடி
*2021-ல் ஒப்புதல் பெற்ற இந்த திட்டம் Make In India முயற்சியின் ஒரு பாரிய பகுதியாக கருதப்படுகிறது.
*இத்திட்டத்திற்காக Mazagon Dock Shipbuilders Ltd நிறுவனம் ஜேர்மனியின் ThyssenKrupp Marine Systems நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular