நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் சாட்சி ஒருவரை அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்ததற்காக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு காவல் பிரிவினால் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவதகமவைச் சேர்ந்த 49 வயதான இராணுவ அதிகாரி, 57வது படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெருகல் பகுதியைச் சேர்ந்த சாட்சி ஒருவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தப் பிரிவின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here