Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaமகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்...!

மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்…!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

”முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க முன்வந்தோரில் தமிழர் ஒருவர் அடங்குவதாகவும் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.

குறித்த 4 வீடுகளில் ஒன்றைப் பார்வையிட வருமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்று பார்வையிடவில்லை.

மகிந்த ராஜபக்‌ச கொழும்புக்குத் திரும்புவது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அவர் தங்காலையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் சிறிது காலம் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தேவைப்படும்போது கொழும்புக்குத் திரும்புவார் என்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular