Home Horoscope இன்றைய ராசிபலன்-13.09.25

இன்றைய ராசிபலன்-13.09.25

0
இன்றைய ராசிபலன்-13.09.25

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

பகையான உறவுகள் நட்பாகும் நாள். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச் செலவுகளை குறைப்பது பற்றி யோசிப்பீர்கள்.

ரிஷபம்

வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். கவுரவம் அந்தஸ்து உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

கடகம்

வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

சிம்மம்

ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

கன்னி

தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும்.

துலாம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

செல்வ நிலை உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

தனுசு

பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல தகவல் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மகரம்

வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். விலகிச்சென்ற நண்பர்கள் விரும்பி வந்திணைவர்.

கும்பம்

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலை தருவர்.

மீனம்

யோகமான நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உத்தியோக உயர்வு உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here